Monday, July 14, 2008

பொக்கை வாய் உபதேசம்

குரு மரண படுக்கையில் இருந்தார்.... பொது மக்களும் சிஷ்யர்களும் குருவின் படுக்கையை சுற்றி நின்று இருந்தார்கள் .

தலைமை சீடன் குருவை நெருங்கி கலங்கிய கண்களுடன் கேட்டான்,"...குருவே உங்கள் திருவடிக்கு எனது வணக்கம்... உங்களை சிறிது காலத்திற்கு பிறகு ஸ்துல உடலில் பார்க்க முடியாது... இதை நினைக்கும் பொழுது ஏற்ப்படும் வருத்தத்தை அளவிட முடியாது... தயவு செய்து எனக்கு கடைசியாக ஒரு உபதேசம் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் உங்கள் உபதேசம் எனக்கு குருவாக இருக்கட்டும்...


உடலில் இருந்து உயிர் பிரியும் நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் குடி கொண்ட முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு...


பின்பு தனது வாயை அகலமாக திறந்தார்... பற்கள் இல்லாத வாயை கட்டினார். தனது நாக்கையும் காண்பித்தார்.

சிஷ்யனுக்கோ ஒன்றும் புரியவில்லை.

கேள்விக்குறியை முகத்தில் தாங்கி நிற்கும் சிஷ்யனை பார்த்து கூறினார்,
"எனது பற்கள் கடினமானதாக இருந்தன , அவை எனது இறுதி காலம் வரை என்னுடன் இல்லை. மென்மையான எனது நக்கு என்னுடன் இபொழுதும் இருக்கிறது...எனதருமை சிஷ்யா.... எப்பொழுதும் மென்மையாக இரு. இதுவே எனது இறுதி உபதேசம் .."


சிஷ்ய பரம்பரைக்கு உபதேசித்த குருவின் பிராணன் "மென்மையாக" பிரிந்தது...


________________________ஓம்_____________________________

மென்மை என்பது மேன்மையான நிலை. பூவில் மென்மை இருப்பதால் தான் அவை இறைவனை பூஜிக்க பயன்படுகிறது.


பஞ்ச பூதத்தில் நீர், நெருப்பு, காற்று, வெளி மற்றும் மண் என அனைத்தும் ஒரு மென்மை இருப்பதை காண முடியும்.

மேன்மையான இறை தன்மையை மென்மையாக தியானிப்போம்...

-
ஸ்வாமி ஓம்கார்

1 comment:

Anonymous said...

Dear guru,
Pranams.Very good story and very informative also.I also belive that guru wl come to shishya not the other way around.Bless all of us.Thanks.|Mahesh