Thursday, July 31, 2008

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

மாலை வேளை....வேதாந்த ஆச்ரமம் ரம்யமாக இருந்தது...
நந்தவனத்துடன் கூடிய ஆச்ரமம் முன்பு மாணவர்கள் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர்.

தர்க்கம் , மீமாம்சை என பல வேத கருத்துக்களை மாணவர்கள் அந்த ஆசிரமத்தில் பயின்று வந்தார்கள்.

அப்பொழுது தென்றல் வீசியது...நந்தவனத்தில் இருந்த மலர் கொடி அசைந்தது...
இதை கண்ட மாணவர்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்தது.

"காற்று வந்ததும் கொடி அசைந்ததா?" என ஒரு பகுதியும் ,
"கொடி அசைந்ததும் காற்று வந்ததா? " மற்றொரு பகுதியும்
என மாணவர்கள் இரு பகுதியாக பிரிந்தனர்.

இந்த தர்க்கம் முற்றிபோகவே , சப்தம் கேட்டு குரு நாதர் வெளியில் வந்தார்.

இரு குழுவின் தர்கத்தையும் கேட்டார்.

பின்பு அனைவரையும் பார்த்து கூறினார் ..."பிரிய ஆன்மாக்களே...! கொடியும் அசையவில்லை, கற்றும் வீசவில்லை... உங்கள் மனம் அசைந்தது , அதனால் எண்ணம் உங்கள் மனதில் வீசியது. "

வேதாந்த மாணவர்கள் உண்மையான வேத சாரத்தை உணர்தார்கள்.

----------------------------- ஓம் ------------------------------------------------

ஆதி சங்கரரின் வேதாந்த கருத்தை எளிமையாக உணரும் கதை இது...

நமது கண்களில் தெரியும் உலகம் என்பது உண்மையல்ல. நமது மனம் அசைவதால் அனைத்தும் அசைவதாக தெரிகிறது...

அதனால் தான் வேதம் நம்மை "அசதோமா ஸத்கரமய" என இருள் நிலையில் இருந்து உண்மை நிலைக்கு வர ப்ராத்தனை செய்ய சொல்கிறது.


அசைவற்ற மனதை கொண்டு என்றும் ஆசையற்றவனை உணருவோம்.

1 comment:

Anonymous said...

இது நல்ல போஸ்ட். ஒவ்வொரு கதையும் ஒரு குரு எடுத்து மக்களுக்கு உதவலாம்.

நீங்கள் சார்ந்துள்ள மடம் எது? (மதமல்ல)

நன்றி
ரமேஷ்